பயிற்றி நிலைமைக் கொத்த நீதியை யாகித் தலைமைக் கொத்த வதுவை யெண்ணென இழுக்க மில்லா வியல்பொடு புணர்ந்த ஒழுக்க மெல்லா மோம்படுத் துரைஇப் பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன் வில்விசை கேட்ட வெரூஉப்பிணை போலக் காவ லாட்டியர் நாமிசை யெடுத்த சொல்லிசை வெரீஇய மெல்லென் பாவை என்முகத் தேயு மிறைஞ்சிய தலையள் நின்முகத் தாயி னிகழ்ந்ததை நாணி நிலம்புகு வன்ன புலம்பின ளாகிச் சிறுமையி னுணர்ந்த பெருமக னிரங்க மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென ஒன்றுபுரி கற்பொ டுலகுவிளக் குறீஇப் பொன்ற லாற்றிய புகழாள் போலக் கொண்ட கொள்கையி னொண்டொடி யோளும் துளிப்பெயன் மொக்குளி னொளித்த லஞ்சுவென் இன்றைக் கேள்வி யிடையிடு மெனினும் சென்றயா நங்கையைச் செவ்வி நோக்கி இன்றுணை மகளிரொ டொன்றியான் விடுத்தரும் சொல்லோடு படுத்துச் செல்கவென் களிறென அவன்வயி னீங்கி யாயங் கூஉய் மகள்வயிற் புக்கு மம்மர்நோய் நீக்கி நல்லோள் கற்கு நாழிகை யிறந்தன வல்லோன் செல்கதன் வளநக ரகத்தெனக் காஞ்சன மாலாய் காவலற் குரையென மணிப்படு மாடத்து வாயில் போந்தவள் பணித்த மாற்ற மணித்தகைக் குரைப்ப ஆர மார்பனும் பேர்வன னெழுந்து கற்றில ளென்னுங் கவற்சி வேண்டா பற்றிய கேள்வியு முற்றிழை முற்றினள் குஞ்சர வேற்றுங் கொடித்தேர் வீதியும் பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப் புணர்ப்பும் நீதியும் பிறவு மோதிய வெல்லாம் நம்பி குமரருந் தந்துறை முற்றினர் வல்லவை யெல்லாம் வில்லோன் மக்களை நல்லவைப்

|