பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   34
Zoom In NormalZoom Out


 

நவிற்றிக் காட்டி
மண்டல மருங்கிற் கொண்டகம் புகுந்து
படைகெழு தெய்வம் புகலப் பலிவகுத்
திடைநாட் பிறையி னேற்றிய திருவிற்
கண்ணா லுறுத்துக் கடவதிற் றாங்கி
எண்ணா லரணமு மீரெண் கரணமும்
துன்னரும் பாசமொடு தொடங்குபு தோன்றி
அரிதியல் சாரியை யந்தரத் தியக்கமும்
பொருவின் னாழிகை பூணு மாறும்
செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்
சாரியை விலக்கும் வேறிரி வகையும்
இடுக்கட் போதி னேமப் பூமியுள்
வகுத்த வாயில் வகைவகை யிவையென
ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங் கிருக்கையும்
செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்
தாழாச் சிறப்பிற் பாழியிற் பயின்ற
காலாட் கரும விகற்பமுங் காட்டிக்
கருவித் தாக்கினுங் காலாட் சுற்றினும்
தனியி னாயினுந் தானையொ டாயினும்
புகவும் போக்கும் பொச்சாப் பின்றிப்
பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி
வண்பரிப் புரவியும் வானெடுந் தேரும்
அண்ணல் யானையும் பண்ணுறுத் தேறி
இலைய வினப்பரி கொளீஇச் சிலையின்
மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை
நுதியமை நுண்படை நூல்வழிச் சிதறி
மழைத்துளி படினும் வான்றுகள் சூழினும்
விலக்கித் தவிர்க்கும் விற்றொழி லுள்ளிட்
டிலக்கத் திண்படை யேறுபல காட்டலும்
தலைத்தேர் யானைக்குந் தருக்கின ராயினர்
படைத்தே ராள பாலக ரிவரென
அவைபுகழ்ந் தெடுத்த வரும்பெறற் கிளவியாடு
தகைமுடி வேந்தன் றாள்புகழ்ந் தேத்தித்
தகைசால்