பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   35
Zoom In NormalZoom Out


 

சிறப்பிற் றன்னொடு நம்மிடைப்
பகைமுத லாகப் பழிதர வந்த
செற்ற நம்வயிற் கொள்ளான் சிறந்த
சுற்ற மாகச் சூழ்ச்சியின் விளக்கி
நன்றுணர் விச்சை நம்பியர்க் கருளி
அன்புவழிப் படுத்த வரச குமரற்குக்
கைம்மா றிதுவெனக் கடவதி னிறையும்
செம்மா ணாற்றாச் சிறுமைய மாதலின்
ஒன்பதின் கோடி யொண்பொருள் கொடுப்பினும்
பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் செய்யான்
நங்குடித் தலைமை யிங்கிவற் கியற்றி
நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்திவன்
வேண்டியது செய்யு மாண்பல திலமென
மண்முத லிழந்தோற்கு மறுமன மழித்துத்
தன்பதிப் புகுந்து தான்மணம் படுகெனக்
குறையுறு கிளவி முறைபல பயிற்றிச்
செயப்படு கருமஞ் செய்ந்நரொ டுசாஅய்
முயற்சி யுள்ளமொடு முந்தவற் போக்கி
அவைக்கள மெழுந்து குவைக்களம் புக்குக்
குலமகள் பயந்த குடிகெழு குமரர்
நிலமக ணயக்கு நீதிய ராகி
வெறுமை நீங்கினர் விச்சையி னமைந்தெனத்
திருநுத லாயத்துத் தேவியர் நடுவட்
பெற்ற நாளினும் பெரும்பூட் புதல்வரைக்
கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ
மகிழ்ச்சிக் கிளவி மழையென விசைப்ப
முகிழ்த்தகை முறுவன் முனிவின்று பயிற்றிக்
கடவர் வகுத்த கரும நாளாற்
கடவதை யாதலின் மடவர லாயத்து
நங்கை கேள்வியு நல்லவைப் படுக்கென
வந்துரைத் தனரால் வத்தவன் றமரென
வெந்திறல் வேந்தனு நன்றென வருளி
வாயிற் கூத்துஞ் சேரிப் பாடலும்
கோயி