சிறப்பிற் றன்னொடு நம்மிடைப் பகைமுத லாகப் பழிதர வந்த செற்ற நம்வயிற் கொள்ளான் சிறந்த சுற்ற மாகச் சூழ்ச்சியின் விளக்கி நன்றுணர் விச்சை நம்பியர்க் கருளி அன்புவழிப் படுத்த வரச குமரற்குக் கைம்மா றிதுவெனக் கடவதி னிறையும் செம்மா ணாற்றாச் சிறுமைய மாதலின் ஒன்பதின் கோடி யொண்பொருள் கொடுப்பினும் பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் செய்யான் நங்குடித் தலைமை யிங்கிவற் கியற்றி நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்திவன் வேண்டியது செய்யு மாண்பல திலமென மண்முத லிழந்தோற்கு மறுமன மழித்துத் தன்பதிப் புகுந்து தான்மணம் படுகெனக் குறையுறு கிளவி முறைபல பயிற்றிச் செயப்படு கருமஞ் செய்ந்நரொ டுசாஅய் முயற்சி யுள்ளமொடு முந்தவற் போக்கி அவைக்கள மெழுந்து குவைக்களம் புக்குக் குலமகள் பயந்த குடிகெழு குமரர் நிலமக ணயக்கு நீதிய ராகி வெறுமை நீங்கினர் விச்சையி னமைந்தெனத் திருநுத லாயத்துத் தேவியர் நடுவட் பெற்ற நாளினும் பெரும்பூட் புதல்வரைக் கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ மகிழ்ச்சிக் கிளவி மழையென விசைப்ப முகிழ்த்தகை முறுவன் முனிவின்று பயிற்றிக் கடவர் வகுத்த கரும நாளாற் கடவதை யாதலின் மடவர லாயத்து நங்கை கேள்வியு நல்லவைப் படுக்கென வந்துரைத் தனரால் வத்தவன் றமரென வெந்திறல் வேந்தனு நன்றென வருளி வாயிற் கூத்துஞ் சேரிப் பாடலும் கோயி

|