பெருக்கியும் வலித்து நெகிழ்த்தும் குறுக்கியு நீட்டியு நிறுப்புழி நிறுத்தும் மாத்திரை கடவா மரபிற் றாகிக் கொண்ட தானங் கண்டத்துப் பகாமைப் பனிவிசும் பியங்குநர் பாடோர்த்து நிற்பக் கனிகொ ளின்னிசைக் கடவுள் வாழ்த்தித் தேவ கீதமொடு தேசிகந் தொடர்ந்த வேத வின்னிசை விளங்கிழை பாடத் திருந்திழை மாதர்கொ றெய்வங் கொல்லென இருந்தவர் தெருளா ரிசைபுகழ்ந் தேத்தி நூலுஞ் செவியு நுண்ணிதி னுனித்தே யாழும் பாடலு மற்ற மின்றி விலக்கும் விடையும் விதியி னறிந்து துளக்கில் கேள்வித் தூய்மையின் முற்றி வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும் கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள் இறைகெழு குமரரு மேனை விச்சைத் துறைநெறி போகிய துணிவின ராயினர் தேயாத் திருவ நீயுந் தேரின் நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய் வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய் இனையோய் தாணிழற் றங்கிய நாடே வயிர வெல்படை வானவ ரிறைவன் ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும் மீமிசை யுலகினுந் தீதிகந் தன்றெனத் தொல்லிசை யாளர் சொல்லெடுத் தேத்தப் புகழார் வெய்திய திகழ்முடிச் சென்னியன் ஆசில் பாட லமிழ்துறழ் நல்யாழ்க் கேள்வி நுனித்த கீத வித்தகத் தாசா ரியரொ டரங்கியன் மகளிரை ஏடுகோ ளாள ரெனையரென் றெண்ணிப் பேரெழுத் தோலை பெறுமுறை நோக்கிக் கட்டுடைக் கலனுங் கதிர்முத் தாரமும் பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி இலைத்தொழிற் றடக்கைய ளெழுந்தீ கினியெனக் கலைத்தொழி லவையங் கைதொழப் புக்காங் கிருந்த விறைவன் றிருந்தடி குறுகிச் செம்பொ னல்

|