யாழ் சிலதிகைந் நீக்கி அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி இறைஞ்சிய மாதரை யெடுத்தனன் றழீஇப் பிதிர்சுணங் காகமொடு பெருந்தோ ணீவிக் கதிர்பொற் பட்டமொடு கனங்குழை திருத்தி ஒண்ணுதன் மாதரை யொருகை பற்றிப் பொன்னிழை தாயுழைப் போகெனப் புகலலும் தான்முன் கண்ட தவற்றின ளாதலிற் சென்ற வாயிற் கொன்றல ளூடிப் புலவியிற் கருகிய திருமுக மிறைமகட் குவகையின் மகிழ்ந்த முறுவல ளாகிக் கடைக்கட் டூதாற் காவலற் கடைஇச் சுடர்க்குழை பயந்தோள் சொல்லா ணிற்ப இன்சொன் மகளி ரெனைப்பல ருள்ளும் நுந்தை நெஞ்ச நீயறப் பெற்றாங் குரக்களி றடக்கிய வோசைத் தாகி வரத்தொடு வந்த வசைதீர் சிறப்பின் வத்தவ குலத்துத் துப்பெனத் தோன்றிய தகையொலி வீணையொ டவைதுறை போகி உருவிற் கொத்த திருவினை யாகிக் குடிவிளக் குறூஉங் கொடியே வாவென மாத ராயத்து மகள்வயிற் கொளீஇத் தாய ரெல்லாந் தழீஇயினர் முயங்கிச் சுற்ற மாந்தர் தொக்கனர் புகல வத்தவ ரிறைவனை வருகெனக் கூஉய்ப் பொற்கோட் டம்பலம் பொலிய வேறிக் கற்றறி வாளர் சுற்றிய நடுவட் டாமுயல் வேட்கையின் மாநிலத் துறையுநர் மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு நங்குடி வலித்தல் வேண்டி நம்பி தன்குடி கெடுத்த தகவி லாளனேன் என்மனம் புகல வேண்டி னிவனைத்தன் மண்மிசை நிறுக்கு மந்திர மிருக்கென மதிவ லாளர் விதிவகை யிதுவெனத் தண்ணுஞ் சேனையுந் தகைக்கோ சம்பியும் பண்டுகண் ணழிந்த பகையினை நீக்கிப் பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென் றொன்றெனப் பயிற்றி யுருமிடித் தன்ன வென்றி முரசம் வீதிதோ றெருக்கி

|