செம்முதிர் பெண்டிரொடு கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட வட்ட நெல்லு மாண்பில பெரிதெனக் குற்ற முண்டெனிற் கூறுமி னெமக்கெனக் கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கிப் பிட்ட வாயள் பெரும்பா கீரதி பொய்ப்பே யேறிப் பொள்ளென நக்கு முலையிடைத் துளங்கு முத்துற ழாரமொடு தகையெருத் துரிஞ்சுந் தமனியக் குழையள் கொடும்பூண் மார்பிற் கூந்தல் பரப்பிப் பிடிக்கை யன்ன பெருந்தோ ளோச்சி இடிக்குரன் முரசின்மு னெழுந்தன ளாடி விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇத் திருநீ ராட்டணி மருவீ ராயிற் பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவலென் றஞ்சி லோதி யணங்குவாய் கூறப் பன்றியெறி யுற்ற புண்கூர் ஞமலி குன்றா வடிசிற் குழிசி காணினும் வெரீஇ யன்ன வியப்பின ராகி அலகை மூதூ ரான்றவ ரெல்லாம் உலகந் திரியா வொழுக்கின ராதலிற் காவன் மன்னற்குக் கதுமென வுரைத்தலிற் றேவர் சொல்லும் தேததை யாகென வெண்முகை யடுத்துப் பைந்தோடு படுத்து மாத ரங்கையின் மங்கலத் தியற்றிய வாகைக் கண்ணி வலத்திற் சூட்டித் தானைச் சேரித் தலைப்பெருந் திருவன் நாணீ ராட்டணி நாளையென் றறைதலும் விளையாட் டீரணி விற்றுங் கொள்ளும் தொலைவின் மூதூர்த் தொன்றின மறந்துராய்த் தோணியு மரமுந் துறைநா வாயும் நீரியன் மாடமு நீந்தியற் புணையும் சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவைநறுந் தேறலும் செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் கண்ணார் பிடிகையுங் கட்டமை யூர்தியும் பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிச் செவ்வி பெறாஅ

|