வைகல ராகி வான்கிளர்ந் தன்ன வளநீ ராட்டணி சேணிடை யுறைநருஞ் சென்று காண்புழிப் புதவகத் துறைந்தோர் போம்பொழு தென்றென உதயண குமரனை யோர்த்துறச் சொல்லி நூலறி வாளர் நால்வரை விட்டபின் உவாக்கடற் பரப்பி னொல்லென மயங்கி விழாக்கொண் டன்றால் வியனகர் விரைந்தென் விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை புரந்துட னயரும் பொலிவின தாகி மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும் பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி யாழுங் குழலு மியம்பிய மறுகின் மாலை யணிந்த மணிக்காழ்ப் படாகையொடு கால்புடைத் தெடுத்த கதலிகை நெடுங்கொடி ஆர்வ மகளிரு மாய்கழன் மைந்தரும் வீர குமரரும் விரும்புவன ரேறிய மாவுங் களிறு மருப்பிய லூர்தியும் காலிரும் பிடியுங் கடுங்காற் பிடிகையும் தேரு மாக்களுந் தெருவகத் தெடுத்த எழுதுகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கிப் பகலோன் கெடுமெனப் பாற்றுவன போல அகலிரு வானத் துகடுடைத் தாட விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து வெண்சுடர் வீதி விலக்குவனர் போல எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ நகர நம்பிய ரரச குமரர் நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும் இறைவ னாணை யீங்கெவன் செய்யும் புதல்வ ராணை புதுநீ ராட்டெனச் சிறாஅர் மொய்த்த வறாஅ விருப்பிற் கம்பலைத் தெருவி னெம்பரு மெடுத்த குடையுங் கொடியுங் கூந்தற் பிச்சமும் அடல்வே லியானை யடக்குங்

|