பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   42
Zoom In NormalZoom Out


 

காழும்
களிறெறி கவரியொடு காண்டக மயங்கிப்
பெருநீர்க் கருங்கட றுளுப்பிட் டதுபோல்
ஒண்ணுதன் மகளி ருண்க ணிரைத்த
கஞ்சிகை துளங்கக் கயிற்றுவரை நில்லாச்
செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி பெறாஅ
குரைத்தெழுந் துகளுங் குரம்புவி நிரைத்துடன்
சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின்
அவிழ்ந்த கூந்த லங்கையி னடைச்சி
அரிந்துகால் பரிந்த கோதைய ராகத்துப்
பரிந்துகா ழுகுத்த முத்தினர் பாகர்க்குக்
காப்பு நேரிய கூப்பிய கையினர்
இடுக்க ணிரப்போர் நடுக்க நோக்கி
அரறுவ போல வார்க்குந் தாரொ
டுரறுபு தெளித்துக் கழறும் பாகர்
வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும்
கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும்
செற்றுபு செறிந்தவை மொக்கு ளாக
மக்கட் பெருங்கடன் மடைதிறந் ததுபோல்
எத்திசை மருங்கினு மிவர்ந்துமே லோங்கிய
கட்டளை வாயி லிவர்வனர் கழிந்து
வரம்பில் பல்சனம் பரந்த பழனத்
தாற்றிரு கரையி னசோகம் பொழிலினும்
காய்த்தொசி யெருத்தின் கமுகிளந் தோட்டமும்
மயிலுங் குழிலு மந்தியுங் கிளியும்
பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் காவுதொறும்
உயரத் தொடுத்த வூசல தாகி
மரந்தொறு மொய்த்த மாந்தர்த் தாகிப்
புறங்கவின் கொண்ட நிறங்கிளர் செல்வத்
தூரங் காடி யுய்த்துவைத் ததுபோல்
நீரங் காடி நெறிப்பட நாட்டிக்
கூல வாழ்நர் கோன்முறை குத்திய
நீலக் கண்ட நிரைத்த மருங்கின்
உண்ண மதுவு முரைக்கு நானமும்
சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும்
அணியுங் கலனு மாடையு