நிறைந்த கண்ணகன் கடைக ளொண்ணுத லாயத்துக் கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய தூதுவர் போல மூசின குழீஇ ஆணைத் தடைஇய நூனெறி யவையத்துக் கல்வி யாளார் சொல்லிசை போல வேட்போ ரின்றி வெறிய வாக மாக்க ளுழிதரு மணனெடுந் தெருவின் மடலிவர் போந்தை மதர்வைவெண் டோட்டினும் படலைவெண் சாந்தினும் படத்தினு மியன்ற பந்தரும் படப்பும் பரந்த பாடி அந்தமு மாதியு மறிவருங் குரைத்த யோசனை யகலத் தொலிக்கும் புள்ளிற் றேவரும் விழையுந் திருநீர்ப் பொய்கைக் கரையுங் கழியுங் கானலுந் துறையும் நிரைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு மிடைபுதலை மணந்த மேதகு வனப்பிற் கடல்கண் கூடிய காலம் போல நூல்வினை நுனித்த நுண்வினைப் படாத்துத் தானக மாடமொடு தலைமணந் தோங்கிய வம்புவரி கொட்டிலொடு வண்டிரை மயங்கிச் செவ்வான் முகிலிற் செறிந்த செல்வத் தெவ்வாய் மருங்கினு மிடையறக் குழீஇ ஊரிறை கொண்ட நீர்நிறை விழவினுள் இறைவன் பணியென் றிறைகொண் டீண்டி நிறைபுனற் புகாஅர் நின்னகத் தோரென விழாக்கோ ளாளர் விரைந்துசென் றுரைத்தலும் உவாக்கட லொலியி னுரிமையொ டுராஅய் விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி எழாநிலை புகாஅ வினங்கடி சீற்றத் தாணை யிகக்கு மடக்கருங் களிறு சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென வேந்துபிழைத் தகன்ற வினைவ ராயினும் சேர்ந்தோர்த் தப்பிய செறுந ராயினும் கலங்கவர்ந் தகன்ற கள்வ ராயினும்

|