பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   46
Zoom In NormalZoom Out


 

நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும்
கழுத்திடு கழங்குங் கவறுங் கண்ணியும்
பந்தும் பாவையும் பைங்கிளிக் கூடும்
யாழுங் குழலு மரிச்சிறு பறையும்
தாழ முழவமுந் தண்ணுமைக் கருவியும்
ஆயத் துதவு மரும்பெறன் மரபிற்
போகக் கலப்பையும் பொறுத்தனர் மயங்கிக்
கூனுங் குறளு மாணிழை மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவுகண் ணுற்ற பொழுதிற் பலருடன்
பண்டிவ் வாழ்வினைத் தண்டியுங் கொள்வோள்
இன்றிந் நங்கை கண்டதை யுண்டுகொல்
பாணி செய்தனள் காண்மின் சென்றென
ஏறிய வையத் தெடுத்த கஞ்சிகைத்
தேறுவா மதியிற் றிருமுகஞ் சுடரக்
கதிர்விரற் கவியலுட் கண்ணிணை பிறழ
நெருக்குறு சுற்றத்து விருப்பி னோக்கி
ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச்
சுட்டுருக் ககிலின் வட்டித்துக் கலந்த
வண்ண விலேகை நுண்ணிதின் வாங்கி
இடைமுலை யெழுச்சித் தாகிப் புடைமுலை
முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி
முதலின் முன்னங் காட்டி நுதலின்
சுட்டியிற் றோன்றிய சுருளிற் றாகி
வித்தகத் தியன்றதன் கைத்தொழில் காட்டி
இன்னிசை வீணை யன்றியு நின்வயின்
உதயண நம்பி யோவியத் தொழிலின்
வகையறி யுபாயமும் வல்லை யாகெனத்
தந்தது முண்டோ பைந்தொடி கூறென
உற்ற புருவத் தொராஅ ராகி
முற்றிழை மகளிர் முறுவல் பயிற்றச்
செழுங்குரன் முரசிற் சேனா பதிமகள்
ஒருங்குயிர் கலந்த வுவகைத் தோழியை
நறுநீர்க் கோலத்துக் கதிர்நலம் புனைஇயர்
நீடகத் திருந்த வாசவ தத்தையை
நீசெலற் பாணிநின் றாய ரெல்லாம்
தாரணி வையந் தலைக்கடை