நிறீஇ நின்றனர் திருவே சென்றிடு விரைந்தென விளங்குபொன் னறையுள விழுநிதிப் பேழையுள் இளங்கலந் தழீஇ யெண்ணிமெய்ந் நோக்கித் தோழியர்க் கெல்லா மூழூழ் நல்கி வதுவை வைய மேறினள் போலப் புதுவது மகிழ்ந்த புகற்சிய ளாகிப் பதும காரிகை மகண்முக நோக்கித் தனித்துஞ் சேனைப் பனித்துறைப் படியின் நீரின் வந்த காரிகை நேர்த்தது துகடீ ரிருந்தவத் துணிவின் முற்றி முகடுய ருலக முன்னிய முனிவரும் கண்டாற் கண்டவாங் கதிர்ப்பின வாகித் தண்டாப் பெருந்துயர் தருமிவள் கண்ணென உண்மலி வுவகைய ளாகித் தன்மகள் இனவளை யாயத் திளையர் கேட்பப் புனல்விளை யாட்டினுட் போற்றுமின் சென்றென ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி ஆங்கவ ருள்ளு மடைக்கல நினக்கெனக் காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின் ஏற்ற கோலத் தியம்புங் கிண்கிணி நூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத் தெய்வச் சுற்றத்துத் திருநடந் ததுபோற் பையென் சாயலொடு பாணியி னொதுங்கி உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும் யவனக் கைவினை யாரியர் புனைந்தது தமனியத் தியன்ற தாமரை போலப் பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும் தவழ்கதிர் முத்துந் தானத் தணிந்தது விலைவரம் பறியா வெறுக்கையுண் மிக்க தலையள வியன்றது தனக்கிணை யில்லது தாயொடு வந்த தலைப்பெரு வையம் வாயின் முற்றத்து வயங்கிழை யேறப் பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும் செந்நூல் விசித்த நுண்ணுக நுழைந்த இலக்கணப் பாண்டியம் வலத்தி னெற்றிக் கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும் பண்ணிய வையம் பள்ளி புகுகென மூதறி பாக னேற லியையான் இலக்கண மின்றென விலக்கினன் கடிய

|