பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   48
Zoom In NormalZoom Out


 

ஆடகப் பொற்கவ றணிபெறப் பரப்பிக்
கூடங் குத்திய கொழுங்காழ்க் கேற்ப
நாசிகைத் தானத்து நகைமுத் தணிந்து
மாசறு மணிக்கான் மருப்புக் குடமிரீஇ
அரக்குருக் கூட்டிய வரத்தக் கஞ்சிகைக்
கரப்பறை விதானமொடு கட்டி லுடையது
கோதை புனைந்த மேதகு வனப்பின்
மல்லர் பூண்ட மாடச் சிவிகை
பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
மெல்லியன் மாதரை யுள்ளகம் புகுத்தி
மல்லற் பெருங்கிளை செல்வுழிப் படர
முனிவ ராயினு மூத்தோ ராயினும்
எனையீர் பிறரு மெதிர்வரப் பெறீரென
வானுறை யுலகினும் வையக வரைப்பினும்
தான விளைவினுந் தவத்தது பயத்தினும்
எண்ணரும் பல்லுயி ரெய்தும் வெறுக்கையுட்
பெண்டிருண் மிக்க பெரும்பொரு ளின்மையின்
உயிரெனப் படுவ துரிமை யாதலிற்
செயிரிடை யிட்டது செல்வன் காப்பென
ஆறுகடி முரச மஞ்சுவரக் கொட்டிக்
காவ லாளர் காற்புறஞ் சுற்றப்
புயன்மலை தொடுத்துப் பூமலர் துதைந்து
வியன்கா மண்டிய வெள்ளம் போல
மாட மூதூர் மறுகிடை மண்டிக்
கோடுற நிவந்து மாதிரத் துழிதரும்
கொண்மூக் குழாத்திற் கண்ணுற மயங்கி
ஒண்ணுதன் மகளி ரூர்தி யொழுக்கினம்
புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை முன்னித்
தண்பொழில் கவைஇய சண்பகக் காவிற்
கண்டோர் மருளக் கண்டத் திறுத்த
விழாமலி சுற்றமொடு வெண்மண லேறி
நாளத் தாணி வாலவை நடுவண்
நிரந்தநீர் விழவினு ளிரந்தோர்க் கீக்கெனப்
பன்னீ ராயிரம் பசும்பொன் மாசையும்
குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும்
கலிங்க வட்டியுங்