பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   49
Zoom In NormalZoom Out


 

கலம்பெய் பேழையும்
பொறியொற் றமைந்த குறியொடு கொண்ட
உழைக்காப் பாள ருள்ளுறுத் தியன்ற
இழைக்கல மகளி ரிருநூற் றுவரொ
டியாழறி வித்தகற் கூர்தி யாவது
கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத்
தனக்கென் றாய்ந்த தலையிரும் பிடிகளுள்
இலக்கணக் கரும மெட்டா முறையது
மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
விதியோர் கொளுத்திய வீரிய முடையது
சேய்ச்செல னோன்பரிச் சீலச் செய்தொழிற்
பூச்செய் கோலத்துப் பொலிந்த பொற்படை
மத்தக மாலையொடு மணமகள் போல்வ
துத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
பத்திரா பதியே பண்ணிச் செல்கென
உதயண குமரற் கியைவன பிறவும்
உழைக்கல மெல்லாந் தலைச்செல விட்டு
வல்லே வருகவில் லாளன் விரைந்தென
விட்ட மாற்றம் பெட்டனன் பேணிச்
சென்ற காட்சிச் சிவேதனைக் காட்டிப்
பொன்னறை காவலர் பொறிவயிற் படுகெனச்
செண்ண மகளிர் செப்பிற் காட்டிய
வண்ணஞ் சூட்டின கண்ணியிற் கிடந்த
பனிப்பூங் குவளை பயத்தின் வளர்த்த
தனிப்பூப் பிடித்த தடக்கைய னாகி
நெடுநிலை மாநகர் நில்லான் போதந்
திடுமணன் முற்றத் திளையரு ளியன்று
படுமணி யிரும்பிடிப் பக்க நண்ணிப்
பொலிந்த திருவிற் பொற்புடைத் தாகி
மலிந்த யாக்கையின் மங்கல மிக்கதன்
வனப்பிற் கொவ்வா வாழ்விற் றாகி
வாழ்நா ளற்ற வகையிற் றாயினும்
கணைச்செல வொழிக்கும் கடுமைத் திதுவென
மனத்திற் கொண்ட மதிய னாகிக்
கண்டே புகன்ற தண்டா வுவகையன்
தாரணி யிரும்பிடி தலைக்கடை யிரீஇ
ஏரணி யெருத்த மிறை