பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   50
Zoom In NormalZoom Out


 

மக னேறலும்
தூய்மை யின்றென மாநிலத் தியங்காக்
கடவு ளியக்கங் கற்குவ போலக்
குளம்புநில னுறுத்தலுங் குறையென நாணிக்
கதழ்ந்துவிசை பரிக்குங் கால வாகி
உரத்தகைப் பொற்றா ரரற்று மார்ப்பிற்
பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி
மருங்கிரு மணிப்புடை நிரந்துடன் மிளிர
நான்முகங் கவைஇய வான்செய் பச்சைய
தானச்செங் கோட்டுத் தோன்மணைப் படுத்த
சித்திரத் தவிசிற் செறிந்த குறங்கிற்
பொற்றொடர் பொலிந்த பூந்துகிற் கச்சைய
கத்திகை சிதர்மணி கட்கத்துத் தெரிப்ப
வித்தக நம்பியர் பக்கத்து வலித்த
கானத்துக் குலைந்த கவரி யுச்சிய
தானைத் தலைப்படை பாணியிற் பரிப்ப
அச்செறி புலவ ரளவுகொண் டமைத்துக்
கட்க நுனித்த கடைக்கட் டிண்ணுகம்
கொய்சுவ லிரட்டை மெய்யுறக் கொளீஇ
ஒட்டிடை விட்ட கட்டின வாயினும்
ஒன்றிநின் றியங்காச் சென்றிடை கூடுவ
மாயங் காட்டுநர் மறையப் புணர்ந்த
கோவை நாழிகைக் கொழூஉக்கண் கடுப்ப
வடுச்சொ னீங்கிய வயங்கிய வருணத்
திடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர்
உள்ளுறக் கோத்த வள்புகொள் வலித்தொழிற்
பாகர் நின்ற பண்ணமை நெடுந்தேர்
ஆக........................புறஞ்சுற்றக்
காலியற் புரவியொடு களிறுபல பரப்பிப்
பால குமரர் படையகப் படுப்ப
உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பிச்
செருமிகுந் தாமமொடு சேனையிற் கூடி
மன்னவ னிருந்த தண்பொழிற் காவிற்
சென்றிறுத் தனரா னம்பிய ரொருங்கென்
நம்பியர் கூடிய நாளவை மருங்கிற்
கம்பலைப் பந்தர்க் காழகில் கழுமிய
திருநா ளிருக்கைத் திறல்கெழு வேந்தன்
பெருநீ ராட்டணி