பெட்கும் பொழுதெனச் செம்பொற் படத்துப் பேறுவலித் திருந்த மங்கலக் கணிகண் மாதிர நோக்கிப் புரைமீன் கூடிய பொழுதியல் கூற இருப தியானையு மெண்பது புரவியும் அருமணி மான்றே ரையைந் திரட்டியும் ஒருநூ றாயிரத் தொருகழஞ் சிறுத்த தமனிய மாசையொடு தக்கணை யுதவிக் கடவது நிறைந்த தடவளர் செந்தீ ஒடியாக் கேள்விப் பெரியோ ரீண்டிய படிவக் குழுவினு ளடிமுதல் வணங்கி ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென மாசை வாரி மன்னவ னாடி அறிநர் தானத் தாயிரம் பொற்பூக் கருவிநிலைப் பள்ளிக்குத் தொழுதனன் போக்கிச் சுண்ணம் விரவிய சுரியிரும் பித்தைக் கண்ணி நெற்றி வெண்சூட் டேற்றித் தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக் கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச் செம்பொ னெல்லின் செல்கதிர் சூட்டி வெண்டுகி லிட்ட விசய முரசம் பண்டிய லமைந்த படுகட னெல்லாம் தண்டொழிற் செங்கோ றலைத்தலை சிறக்கென வெந்திறல் வேந்தன் விட்டிவை கூறக் கண்டொரு பாணியிற் கடல்கிளர்ந் ததுபோற் பல்படை மொய்த்த மல்லற் பெருங்கரை மழைமலைத் தன்ன மாணிழை மிடைந்து வம்புவிசித் தியாத்த செம்பொற் கச்சையர் மாலை யணிந்த கோல்செய் கோலத்துப் பூப்போ துறுத்த மீப்பொற் கிண்கிணி இடுமணிப் பெருநிரை நெடுமணிற் கிடைஇ இரும்புறம் புதைய வெழின்மறைந் திருந்த கருங்காற் கானத்துக் கண்மணிக் குழாத்திடை ஏற்றரி மாவின் றோற்றம் போல மின்னிழை மகளிரொடு மன்னவன் றோன்றி விசைய வேழத் திசையெருத் தேற்றிப் பெருவிறல் வேந்தன் சிறுவரை

|