பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   52
Zoom In NormalZoom Out


 

யெல்லாம்
ஓடுநீர்ப் பெருந்துறை யுள்ளம் பிறந்துழி
ஆடுக போயென் றவர்களை யருளி
உதயண குமரனு முவந்துழி யாடித்
துறைநகர் விழவின் றோற்ற மெல்லாம்
பரந்த செல்வங் காண்கெனப் பணித்துப்
புரிந்த பூவொடு பொற்சுணங் கழும
எழுந்த வார்ப்பொ டியம்பல துவைப்பப்
புண்ணியப் பெருந்துறை மன்னவன் படிந்தபின்
இறைகொண் டீண்டிய வேனை மாந்தரும்
துறைதுறை தோறு முறைவிடம் பெறாஅர்
தண்புன லாட்டின் றக்கணை யேற்கும்
அந்த ணாள ரடைக விரைந்தெனப்
பயினூ லாளரைப் பயிர்வனர் கூஉய்க்
கவர்வனர் போலக் காதலி னுய்த்து
நன்கல மேற்றி நாளணி யணிந்து
மங்கல வேள்வியுண் மகளீ வோரும்
செம்பொற் புரிசை வெண்சுதை மாடத்
துழைக்கலம் பரப்பி யுருவிய மகளிரொ
டிழைக்கல நிறீஇ யில்லீ வோரும்
ஆலைக் கரும்பு மரியுறு செந்நெலும்
பாளைக் கமுகின் படுவுஞ் சுட்டிப்
புயல்சே ணீங்கினும் பூவளங் குன்றா
வயலுந் தோட்டமும் வழங்கு வோரும்
நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக்
குளம்புங் கோடும் விளங்குபொன் னுறீஇத்
தளையுந் தாம்பு மளைகடை மத்தும்
கழுவுங் கலனும் வழுவில பிறவும்
பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக்
குன்றாக் கோடி கொடுத்துவப் போரும்
இன்னவை பிறவு மென்னோர்க் காயினும்
உடையவை தவாஅக் கொடைபுரி படிவமொ
டிலமென் மாக்களை யிரவொழிப் பவர்போற்
கலங்கொடை பூண்ட கைய ராகி
வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும்
ஒண்படை யணிந்த வண்பரிப் புரவியும்
உண்டியு முடையுங் கொண்டகஞ் செறித்த
பண்டியு மூர்தியுங் கொண்டன ருழிதந்
தந்தணர்