யெல்லாம் ஓடுநீர்ப் பெருந்துறை யுள்ளம் பிறந்துழி ஆடுக போயென் றவர்களை யருளி உதயண குமரனு முவந்துழி யாடித் துறைநகர் விழவின் றோற்ற மெல்லாம் பரந்த செல்வங் காண்கெனப் பணித்துப் புரிந்த பூவொடு பொற்சுணங் கழும எழுந்த வார்ப்பொ டியம்பல துவைப்பப் புண்ணியப் பெருந்துறை மன்னவன் படிந்தபின் இறைகொண் டீண்டிய வேனை மாந்தரும் துறைதுறை தோறு முறைவிடம் பெறாஅர் தண்புன லாட்டின் றக்கணை யேற்கும் அந்த ணாள ரடைக விரைந்தெனப் பயினூ லாளரைப் பயிர்வனர் கூஉய்க் கவர்வனர் போலக் காதலி னுய்த்து நன்கல மேற்றி நாளணி யணிந்து மங்கல வேள்வியுண் மகளீ வோரும் செம்பொற் புரிசை வெண்சுதை மாடத் துழைக்கலம் பரப்பி யுருவிய மகளிரொ டிழைக்கல நிறீஇ யில்லீ வோரும் ஆலைக் கரும்பு மரியுறு செந்நெலும் பாளைக் கமுகின் படுவுஞ் சுட்டிப் புயல்சே ணீங்கினும் பூவளங் குன்றா வயலுந் தோட்டமும் வழங்கு வோரும் நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக் குளம்புங் கோடும் விளங்குபொன் னுறீஇத் தளையுந் தாம்பு மளைகடை மத்தும் கழுவுங் கலனும் வழுவில பிறவும் பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக் குன்றாக் கோடி கொடுத்துவப் போரும் இன்னவை பிறவு மென்னோர்க் காயினும் உடையவை தவாஅக் கொடைபுரி படிவமொ டிலமென் மாக்களை யிரவொழிப் பவர்போற் கலங்கொடை பூண்ட கைய ராகி வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும் ஒண்படை யணிந்த வண்பரிப் புரவியும் உண்டியு முடையுங் கொண்டகஞ் செறித்த பண்டியு மூர்தியுங் கொண்டன ருழிதந் தந்தணர்

|