பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   53
Zoom In NormalZoom Out


 

சாலையு மருந்தவர் பள்ளியும்
தந்தற மருங்கிற் றலைவைப் போரும்
நிலம்பெய் வோரு நிதிபெய் வோரும்
களிறுபெய் வோரும் பரிபெய் வோரும்
பெய்வோர் பெய்வோர் பெயர்வறக் குழீஇக்
கொள்வோ ரறியாக் குரல ராகி
மணற்கெழு பெருந்துறை மயங்குபு தழீஇ
வனப்பொடு புணர்ந்த வகையிற் றாகிப்
புனற்பாற் பட்டன்றாற் பூநகர் புரிந்தென்
புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன் கெழீஇ
விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய
மறுநீங்கு சிறப்பின் மதிலுஞ் சேனை
நறுநீர் விழவி னாளணி கூறுவென்
பனையும் வெதிரும் பாசிலைக் கமுகும்
இனையன பிறவும் புனைவனர் நாட்டிக்
கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி
மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி
அரிச்சா லேகமு மார வள்ளியும்
கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப
வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி
அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த
வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக்
கட்டளை நாசியொடு கபோதங் காட்டி
எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி
ஏரணி யமைந்த வெழுநில நல்வினை
நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்
தரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வியலிக்
கருங்கண் மகளிர் கைபுடைத் தோப்ப
இருங்கண் விசும்பக மிறகுறப் பரப்பிக்
கருங்கயல் கொண்ட கவுள வாகிப்
பொங்கிரும் புன்னைப் பூம்பொழின் முன்னிச்
செங்கா னாரை செல்வன காண்மின்
சாந்தரை...........யன கூலப் பெருங்கடை
ஈண்டிய மாதரை யீண்டிடந் தம்மினெம்
பூங்குழை மாதர் புனலகம் புக்கனள்
ஆங்கியன் றவளைத் தாங்கு