வாசவ தத்தை அரைச மங்கைய ராயமொடு கெழீஇ நிரைவெண் மாடத்து நீரணி காணிய போதரு மென்னுங் காதலின் விரும்பிப் பெருங்காற் புன்னைக் கருங்கோட் டணைத்த நாவாய் பண்ணு மாவிறன் மள்ளர்க்குக் கள்ளடு மகடூஉக் கைசோர்ந் திட்ட வெள்ளி வள்ளம் பல்லுறக் கவ்விக் கூடக் கூம்பி னீடிர ளேறி உச்சிக் கிவருங் கட்கின் கடுவன் வீழ்ந்த தங்களை விசும்புகொண் டேறும் தெய்வ மகாஅரி னையுறத் தோன்றித் துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மின் சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் அழனறுந் தேற லார மாந்திக் காழக மீக்கொண் டாழுந் தானையன் வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத் துட்டக் கிளவி பெட்டவை பயிற்றிக் கட்பகர் மகடூஉக் கட்குடை யோசையும் கன்னமர் பள்ளிக் கம்மிய ரிடிக்கும் பன்மலர்க் காவி னம்மனை வள்ளையும் குழலும் யாழும் மழலை முழவமும் முட்டின் றியம்பும் பட்டின மொரீஇத் துறக்கங் கூடினுந் துறந்திவ ணீங்கும் பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி ஆர்த்த வாய னூர்க்களி மூர்க்கன் செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி அவ்வழி வருமோ ரந்த ணாளனைச் செல்ல லாணை நில்லிவ ணீயென எய்தச் சென்று வைதவண் விலக்கி வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப் பழித்துக் கூறுநின் பார்ப்பனக் கணமது சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக் கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின் பல்காசு நிரைஇய வல்குல் வெண்டுகில் ஈரத் தானை நீரிடைச் சோரத் தோட்டார் திருநுதற்

|