பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   56
Zoom In NormalZoom Out


 

சூட்டயற் சுடரும்
சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து
மகர குண்டல மறிந்துவில் வீசக்
கிளரும் பாசிழைக் கிண்கிணிக் கணைக்கால்
அஞ்செஞ் சீறடி யஞ்சுவர வோடி
நிரைவளை மகளிர் நீர்குடை வொரீஇப்
புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின்
கருங்காற் புன்னையொ டிருங்கரும் புடுத்து
நாணல் கவைஇய கான லொருசிறை
மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த
அவிழ்பூங் கோதையொ டவிரிழை பொங்க
எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த
நெடுவீ ழூசன் முடிபிணி யேறித்
தொடுவேன் முற்றத்துத் தோழியொ டாடாப்
பட்டியல் கண்டத்துப் பலர்மனங் கவற்றவோர்
எட்டி குமர னினிதி னியக்கும்
இன்னொலி வீணைப் பண்ணொலி வெரீஇ
வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி
ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர்
களிமயில் கணங்கொண் டாடுவன காண்மின்
அதிரல் பரந்த வசோகந் தண்பொழில்
மணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழல்
பனிப்பூங் குவளையொடு பாதிரி விரைஇ
வேதிகை யெறிந்த வெண்மணற் றிண்ணைப்
பாலிகைத் தாழியொடு பல்குட மிரீஇ
முந்நீர்ப் பந்தர் முன்கடை நாட்டி
வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் பகரும்
கலம்பூச் சரவத் திலஞ்சி முற்றத்துக்
கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி
நெய்ச்சூட் டியன்ற சிறுப லுண்டி
நகைப்பத மிகுத்த கைய ராகித்
தொகைக்கணம் போதரு மறச்சோற் றட்டில்
தளையுலை வெந்த வளைவா லரிசி
வண்ணப் புழுக்க லுண்ணாது சிதறி
ஊட்டெமக் கீத்த கோப்பெருந் தேவி
முன்ன ராக முன்னுமின் கொண்டெனத்
தலைப்பெரு மடை