| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 7 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| சுந் தாமரைச்
செஞ்சுருள் முண்மு ளைத்திர ளோடு முரிந்துகொண் டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால் கண்மு ளைத்த தடத்த கழியெலாம். | |
| 25. | காந்த ளங்குலை யாற்களி
வண்டினம் கூந்த லம்பிடி வீசக் குழாங்களோ டேந்து சந்தனச் சார லிருங்கைம்மா மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம். |
| 26. | தார்செய் கொன்றை
தளித்ததண் டேறலுண் டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக் கார்செய் காலை கறித்தொறு மெல்லவே போர்செய் மாவின பூத்தண் புறணியே. |
| 27. | அள்ளி
லைக்குவ ளைத்தட மேய்ந் தசைஇக் கள்ள லைத்த கவுட்கரு மேதிபால் உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலாற் புள்ள லைத்த புனல புலங்களே. |
| 28. | கெண்டை
யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய் முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா வண்டல் வார்கரை மாமக ரக்குழாம் கண்டு நின்று கனலுங் கழியெலாம். |