| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 9 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 34. | கலவர்தஞ்
சிறுபறை யிசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே. |
| 35. | மாக்கொடி
மாணையு மௌவற் பந்தரும் கார்க்கொடி முல்லையுங் கலந்த மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும் தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொத்ததே. |
| முதலாவது
நாட்டுச் சருக்க முற்றும்.
2.
நகரச் சருக்கம் | |
| 36. | சொன்னநீர்
வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோர் நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே |
| 37. | சங்கமேய்
தரங்க வேலைத் தடங்கடற் பொய்கை பூத்த அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யகத்து ளாங்கே செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகு நங்கையோர் படிவங் கொண்ட நலத்ததந் நகர ம |