சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   11
Zoom In NormalZoom Out

மென்பவே.
 
42.கண்ணிலாக் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.
 
43.மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கல
மூடிமா ணகரது முரல்வ தொத்ததே,
 
44.தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின் மிளைக்கு மென்பவே.
 
45.பளிங்கு போழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கொடி வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலான்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
 
46.காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவன மயங்கு மென்பவே.
 
47.விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்