| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 23 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மர் முழங்கொலி மூரித்
தானையன் அரசவை மண்டப மடைவ தெண்ணினார். | |
| 91. | பொன்னவிர்
திருவடி போற்றி போற்றியென் றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற் கன்னியர் கவரிகா லெறிப்பக் காவலன் முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான். |
| 92. | மஞ்சிவர்
வளநகர் காக்கும் வார்கழல் நஞ்சிவர் வேனர பதியை யாயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர் கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார். |
| 93. | வாசநீர்
தெளித்தலர் பரப்பி வானகம் ஏசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத் தோசைநீண் மண்டப முவந்த தெய்தினான். |
| 94. | பளிங்கொளி
கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட் டுளங்கொளி பவழத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி வளங்கவின் றனைய தாய மண்டப |