சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   29
Zoom In NormalZoom Out

யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்.
 
114.சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலாற்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமோ.
 
115.விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகள்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலாள்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே.
 
116.நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.