சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   33
Zoom In NormalZoom Out

130.வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமேல்
இரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே.
 
131.அம்பொன் மாலை யார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்ப னார் கொ டுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னிற்ப ழுத்து வீழ்ந்த
                                     சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே.
 
132.வேய்நி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்கதிர்ப் பரூஉம ணிக்குலை குலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே.
 
133.காந்தி நின்ற கற்ப கந்நி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மேர்செய
வாய்ந்தெ ரிந்த செம்பொன் மாடவாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த பொன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.
  
134.மாகில் கண்ணி மை