சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   35
Zoom In NormalZoom Out

முன்ச டிப்பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்.
 
138.இங்கண் ஞால மெல்லைசென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்திறைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்.
 
139.விச்சை யாய முற்றினான் விஞ்சை யார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்செ னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை
                                    மேயினான்.
 
140.வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன்
ஒற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களால்
அற்ற கீழுயிர் மேலரு ளாமையே.
 
141. செம்பொ னீண்முடி யான்செரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டில