| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 36 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| நம்பி யாள்கின்ற நாளி
னடுங்கின கம்ப மாடக் கதலிகை போலுமே. | |
| 142. | மின்னு
வார்ந்தமந் தார விளங்கிணர் துன்னு தொன்முடி யானொளி சென்றநாண் மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன பொன்ன னார்புரு வச்சிலை போலுமே. |
| 143. | வெண்ணி லாச்சுட ருந்தனி
வெண்குடை எண்ணி லாப்புக ழானினி தாண்டநாள் உண்ணி லாப்பல வாயுள வாயின கண்ண னாரொடு காமக் கலங்களே. |
| 144. | மாக்கண்
வைய மகிழ்ந்துதன் றாணிழல் நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள் தாக்க ணங்கனை யார்தம தாயரால் வீக்கப் பட்டன மென்முலை விம்முமே. |
| 145. | வடிய வாளவ னாளவும் வாய்களில் கடிய வாயின கள்ளவிழ் தேமலர் அடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க் கொடிய வாயின கொங்கவிழ் சோலையே. |
| 146. | மாய மாயநின் றான்வரை
மார்பிடை மேய பூமகள் போல |