சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   37
Zoom In NormalZoom Out

விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்.
 
147.பைம்பொற் பட்ட மணிந்தகொல் யானையான்
நம்பப் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினாள்.
 
148.கோவை வாய்க்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவண்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்.
 
149.முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
உருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தியென் பானலர் தாரினான்.
 
150.நாம நல்லொளி வேனம்பி நங்கையாய்
ஏம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்.
 
151.கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளா