இ - ள். இரண்டு திணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் தாந்தோற்றமாக வினையோடு வரும், எ-று.
தோற்றமாக என்பது பெரிதாக என்பது குறித்து நின்றது. எனவே, பெயரொடு வருகை சிறுவரவிற்று என்று கொள்ளப்படும். ஆடூஉ, மகடூஉ, மக்கள், மரம், அவை எனப் பெயர்க்கட் பிறவாற்றானும் வரும் ஆதலின். உதாரணம் மேற்காட்டப்பட்டன.
(10)