நான்காவது ஒழிந்த உருபுகள் ஏனை உருபிற்கு உரிய பொருளொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நான்காவது ஒழிந்த உருபுகளும் ஏனைப் பொருளோடு மயங்கும் மரபினை யுடைய; அவை சொல்லிலக்கணத்தாற் குற்றமில. எ - று. எ - டு. “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று”. | (குறள். 1313) |
இதனுள் ஒருத்திக்கு எனற்பாலது ஒருத்தியை யென இரண்டாவதனோடும் மயங்கி வந்தது.1“அறல்சா அய் பொழுதோடெம் அணிநுதல் வேறாகி” என்றவழிப் பொழுதின்கண் எனற்பாலது பொழுதோடென முன்றாவதனோடு மயங்கிற்று. பிறவும் அன்ன. (27)
1. கலி. பாலை. 26.
|