உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக் கூற்று நான்கு, எ - று. உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமையான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும். (3)
1. ‘அவைதாம்’ என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரைகளில் உள்ளது.
|