ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு

119.

1ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்
உகரந் தானே குற்றிய லுகரம்.

உகர ஓகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளி யேற்கும்; ஆண்டுக் குற்றிய லுகரமே ஈறாகுவது, எ - று.

எ - டு. கோ, கோவே; வேந்து, வேந்தே என வரும், பிறவு மன்ன.

(5)


1. இதனை இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை யுரையாளர்.