முறைப் பெயரில் ‘ஐ’ ஈறு விளியேற்குமாறு

122.முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.

ஐகார வீற்று முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வோடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ - று.

எ - டு. அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று.

(8)