னகர ஈறு விளியேற்குமாறு
நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ - று.
ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை.
எ - டு. சோழன், சோழா; வெற்பன், வெற்பா; சாத்தன், சாத்தா எனவரும்.
(12)