னகார ஈற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். னகார ஈற்றுள் முறைமை குறித்த பெயர் ஏகாரத்தோடு விளி ஏற்கும், எ - று.
எ - டு. மகன் என்பது மகனே என வரும்.
ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகன் என்னும் பெயரும் ஏவொடு சிவணும் என்று கொள்க. 1“பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே” என வரும். 2சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅ மகாஅ-ஈன்றாட் கொருபெண் இவள் என ஆகாரமாகியும் வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பிற பெயர்க்கண்ணும் ஏவொடு வருதல் கொள்ளப்படும்.
| 3கூந்தன்மா வூர்ந்து குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லியஞான் றுண்டால்--யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. |
எனவும், கோன் என்பது கோனே எனவும் வரும்.
இவை செய்யுள் மருங்கினும் என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளினும் அமையும்.
(18)
1. குறுந். 156.
2. பரி. 8-ஆம் பாடல்.
3. முத்தொள்ளாயிரம்.