ரகர ஈற்று வினையாலணையும் பெயர் விளி ஏற்குமாறு

135.தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.

இ - ள். மேற் சொல்லப்பட்ட ஈறுகள் தொழிற் பெயராயின் ஏகாரம் வருதலும் குற்றமில்லை என்பார் அறிந்தோர். எ - று.

உம்மை இறந்தது தழீஇயிற்று.

எ - டு. வந்தார், வந்தவர் என்பன வந்தீர் என வருதலேயன்றி, வந்தாரே, வந்தவரே எனவும் வரும்.

ஈரோடு சிவணும் என்றோதி, ஏகாரம் வருதலுங் குற்றமில்லை என்ற தனான் அதனோடு அடுத்து வருதலும் கொள்க. வந்தீரே எனவும் வரும்.

(21)