ரகர ஈற்றுள் விளி ஏலாதன
சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.
ரகார ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்.சுட்டு முதலாகிய ரகரவீற்றுப் பெயர்1 மேற் சொல்லப்பட்ட சுட்டு முதற் பெயர் போல விளி ஏலா, எ - று.
எ - டு. அவர், இவர், உவர், அத்தன்மையர், அத்தன்மையார் என்பன விளி ஏலா.
(24)
1. 133 ஆம் நூற்பா.