இதுவுமது
நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை இரண்டும் அவற்றியல் பினவே.
இதுவும் அது
இ - ள். நும்மின் திரிபெயராவது நீயிர். வினாவின் பெயராவது வினாவானாகிய பெயர். அது யார், யாவர் என்பது. அம் முறையாகிய இரண்டு பெயரும் விளியேலா எ - று.
இவ் வீற்றினுள் முறைப் பெயர் கூறாதது என்னையெனின், அது பொது விதியான் அடங்குதலின் என்க.
(25)