ளகார ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தொழிற்பெயர்க்கண்ணும் பண்புப் பெயர்க் கண்ணும் வரும் ஆள் என் இறுதி ஆய் ஆகும் விளித்தற்கண், எ - று. பெயரென்பது அதிகாரத்தான் வந்தது. ஈண்டு விளி வயினான் என்பதற்கு மேல் உரைத்தவாறே உரைக்க. எ - டு. உண்டாள், கரியாள் என்பன உண்டாய், கரியாய் எனவரும். (28)
|