அஃறிணைப் பொருள் உணரவரும் விரவுப் பெயர் விளி
ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட ஈற்றினை யுடையவாகிய அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப் பெயர் சொல்லப்பட்ட நெறியவாம் விளிக்குங் காலத்து, எ - று.
எ - டு. சாத்தன், சாத்தா; சாத்தி, சாத்தீ; குருடன், குருடா; குருடி, குருடீ எனவரும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
(32)