சொற்கள் இத்துணைய என்றல்

154.

1சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.

சொன்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். சொல் என்று சொல்லப் படுவன பெயர்ச் சொல் வினைச்சொல் என அவ் விருவகைய என்ப ஆசிரியர், எ - று. 

(4)


1. ‘சொல்லெனப் படுவ’ என்பதும் பாடம்.