சொற்கள் இத்துணைய என்றல்
1சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.
சொன்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். சொல் என்று சொல்லப் படுவன பெயர்ச் சொல் வினைச்சொல் என அவ் விருவகைய என்ப ஆசிரியர், எ - று.
(4)
1. ‘சொல்லெனப் படுவ’ என்பதும் பாடம்.