இதுவும் பெயர்ச்சொற்கெல்லாம் பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று
இ - ள். இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் சொற்கும் பெயர்வயின் உரியவை உரியவாம், எ - று.
இதனாற் சொல்லியது முன் எடுத்து ஓதப்படுகின்ற பெயர்களைப் பால் விரித்து ஓதுகின்றிலம்: பெயர்களுள் அவ்வப்பாற்குரிய பெயரைப் பாலறி கிளவியாகக் கொள்க என்றவாறு. இதனானே பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப்படாது என்பதூஉம் கூறினாராம்.
(7)