உயர்திணைப் பெயர்கள்

158.

அவ்வழி,
அவன் இவன் உவனென வரூஉம் பெயரும்
அவள் இவள் உவளென வரூஉம் பெயரும்
அவர் இவர் உவரென வரூஉம் பெயரும்
யான் யாம் நாமென வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவ ரென்னும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த உயர்திணைப் பெயரே.

நிறுத்த முறையானே உயர்திணைப் பெயராமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட பெயரிடத்து அவன் முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் முதலாகிய தன்மைப் பெயர் மூன்றும், யாவன் முதலாகிய வினாவின் பெயர் மூன்றும், ஆய அப் பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று.

யான் என்பது ஒருமை உணர நின்றது. 

(8)