இ - ள். சினையு முதலுமாகிய பொருளுணர்த்துஞ் சொற்குப் செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் உறழப்படும் பொருள் அப்பொருளாகும், எ - று.
துணை யென்பது இணை, முதலென்றதனாற் பண்புந் தொழிலுங் காலமு மிடனும் பொருளுங்கொள்க. சினைபற்றி யுறழ்தல் பெரும் பான்மையாகலான் முற்கூறப்பட்டது. அப்பொருளென்றது அவ்வப்பொருட்கு அவ்வப்பொருளே யுறழப்படுவது, எ - று.
அவை யொருபொருட்கண்ணும் பிறபொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும்.
அவை வினாவின்கண் வருமாறு -- வலமுலையோ இடமுலையோ பெரிதெனத்தன்பொருட்கண் வந்தது. இவள் முலையோ அவள் முலையோ பெரிதெனப் பிறபொருட்கண் வந்தது. இவை சினை. இந்நிறமோ அந்நிறமோ நல்லது: இது பண்பு. இந்நடையோ அந்நடையோ நல்லது: இது தொழில். 1இன்றோ நாளையோ வாழ்வு: இது காலம், இந்நிலமோ அந்நிலமோ விளைவது: இஃது இடம். இவளோ அவளோ கற்புடையாள்: இது பொருள்.
இனிச் செப்பு வருமாறு:-- இம்முலையின் அம்முலை பெரிதென்றானும், ஒக்கு மென்றானும் வரும். பிறவு மன்ன.
இனி அப் பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் வருகின்ற சூத்திரத்தான் அமைக்கப்படும்.
(16)
1. நெருநலோ இன்றோ நல்லது: இது காலம். (இ. ஏ.)