நிறுத்த முறையானே இயற்பெயர் நான்கும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட இயற் பெயரது நிலைமையாவது இருதிணைக்கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும் என அந் நான்கும், எ - று.
பன்மை இயற் பெயர் என்றாராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர் பால் தோன்றலின், அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும். அவ்வாறாதல் வருகின்ற சூத்திரங்களானும் விளங்கும். இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்.
எ - டு. பெண்மை குறித்த பெயர் சாத்தி. ஆண்மை குறித்த. பெயர் சாத்தன். ஒருமை குறித்த பெயர் கோதை. பன்மை குறித்த பெயர் யானை. பிறவும் அன்ன.
(22)