என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து: வினைச் சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங் கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின், அதன்பிற் கூறப்பட்டது.
இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், வினைச்சொல்
இலக்கணம் பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலத்தோடு தோன்றும்; ஆராயும் காலத்து, எ - று.
வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை ஒழியக், காலத்தோடு பொருந்தி நிற்குமது நம்மால் வினைச்சொல்லென வேண்டப்பட்டது, எ - று.
எ - டு. அஃதாவது உண்டலைச் செய்தான் என்பது ஈண்டுத்தின்றான் எனக் காலத்தோடு ஒட்டி நிற்பது.
(1)