ன, ள, ர என்பவற்றின் ஈற்று ‘ஆ’ ‘ஓ’ ஆதல்.

205.பாலறி மரபின் அம்மூ வீற்றும்
ஆஓ ஆகும் செய்யு ளுள்ளே.

இது படர்க்கை வினைக்கண் வரும் திரிபு உணர்த்துதல் நுதலிற்று,

இ - ள். பால் விளங்குதலை மரபாக உடைய னகாரம், ளகாரம், ரகாரம் ஆகிய மூவீற்றும் ஆகாரம் ஓகாரமாகித் திரியும் செய்யுளகத்து, எ - று.

எ - டு. 1வினவி நிற்றந் தோனே. 2நல்லை மன்னென நகூஉப் பெயர்ந் தோளே. 3சான்றோ ரல்லர் தோழி எனவரும். செய்யுள் ஆகாரமாகி வரப் பெறாதோ எனின், வழக்கிற்கு உரியன செய்யுட்காம் என்பது சொல்லாமற் பெறுதும் என்று கொள்க.

(14)


1. அகம்--48.

2. அகம்--248.

3. (பாடம்) சென்றோரன்பிலர் தோழி.