ஆய் என்பது அங்ஙனமாதல்

206.ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.

இது முன்னிலை வினைச்சொற்கு உரியதோர் திரிபு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆய் என்னும் முன்னிலை வினைச்சொல்லும் ஓகாரமாகத் திரியும், எ - று.

முன்னிலை வினை ஈண்டுக் கூறிற்றிலராயினும், திரிபு ஒப்புமை நோக்கிப், பருந்துவிழுக்காடு என்னும் சூத்திரக் கிடக்கையான், ஈண்டு ஓதப்பட்டது.

எ - டு 1வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப எனவரும்.

(15)


1. அகம். 80.