மேலதற்கோர் புறனடை

21.ஆக்கந் தானே காரண முதற்றே.

மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட ஆக்கக் கிளவி காரணத்தை முதலாகவுடைத்து, எ - று.

செயற்கைப் பொருளெல்லாம் ஆக்கங்கொடுத்துக் கூறப்படா; காரணமுள் வழியே ஆக்கங் கொடுப்ப தென்றவாறாயிற்று.

(21)