மேலதற்கோர் புறனடை
மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட ஆக்கக் கிளவி காரணத்தை முதலாகவுடைத்து, எ - று.
செயற்கைப் பொருளெல்லாம் ஆக்கங்கொடுத்துக் கூறப்படா; காரணமுள் வழியே ஆக்கங் கொடுப்ப தென்றவாறாயிற்று.
(21)