அஃறிணை வினைமுற்றின் தொகை

212.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.

விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேல், பன்மையும் ஒருமையுமாகிப் பால் உணர எடுத்து ஓதப்பட்ட ஆறு ஈற்று வினைச்சொல்லும் அஃறிணையிடத்த, எ - று.

அவையாவன, அ, ஆ, வ, து, று, டு என்பன.

(21)